அழகு

posted Apr 28, 2014, 2:29 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:29 AM ]
இன்னுமொரு.....,
இளமைக்காலத்துக்கு,
என்னை அழைத்துச் செல்கிறது,
உனது அரிதாரம் பூசாத அழகு!

அகல விரிந்த கண்களும்,
அப்போது தான்,
முகிழ் திறக்கின்ற,
மலரொன்றின் இதழ்களாய்,
உனது உதடுகளும்,
மான் ஒன்றை அபிநயம்,
பிடிக்கின்ற உனது,
விரல்களின் நளினமும்....,
மாரீச மாய மானாகி,
என்னை ஏமாற்றுகின்றன!

Comments