கதிரவனின் ஆசை !

posted Apr 28, 2014, 2:43 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:43 AM ]
மாலை நேரத்துச் சூரியன்,
ஈரம் குளித்த பூமகளுக்கு,
மஞ்சள் தடவுகிறான்!

விடிகின்ற வேளையில்,
வெள்ளிப் பனித்துளிகளில்,
அவள் குளிக்கும் அழகை,
கண் நிறையக் காணும் தாகம்,
அவனுக்கு....!

பொன் மணல் கடற்கரையில்,
பந்து விளையாடும்,
பையனின் கரங்களுக்குள்,
புகுந்து விடும் அவசரம்...!

தனது காலால் உதைத்துத்,
துன்பங்கள் எதுவுமில்லாத,
தூரத்து உலகமொன்றுக்குத்,
தன்னை உதைத்துத்,
தள்ளி விட மாட்டானா?

இந்தப் பிரபஞ்சத்திலிருந்து,
இன்னுமொரு பிரபஞ்சம் நோக்கிய,
பயணமொன்றுக்கான.
எதிர்பார்ப்புடன்,
ஆதவன் காத்திருக்கிறான்!

Comments