உன் முகத்தில் தோன்றிய, முதல் வெட்கம் கூட, இன்னும் மாறி விடவில்லை! அனுபவங்கள், இனிமையான போது, இருவருமே, சிரித்திருந்தோம்! அவை, சுமைகளான போதில், இருவருமே, சுமந்திருந்தோம்! சுள்ளிகள் பொறுக்கிக், கட்டிய கூட்டில், வளர்ந்த பறவைகளும், சிறகுகள் முளைத்து, பறந்து போய் விட்டன! இரை தேடலும், சுமை தாங்கலும், இல்லாத வாழ்வில்....! இருவருமே, ஒருவர் மற்றவரின், சுமை தாங்கியாக...! பகிர்தலிலும், புரிதலிலும், உனது அருகாமை, இன்றும் கூட, இனிக்கின்றது! |
குறுங்கவிதைகள் >